ஞாயிறு, 24 ஜூலை, 2016

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி !

அடுத்தடுத்த தாக்குதலால் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா அவசர ஆலோசனை< முனிச்,:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தினர்.
கடந்த, எட்டு நாட்களுக்குள், அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.   எங்க நாட்டில கூட ஒரு கூட்டம் பஞ்சம் பிழைப்பதற்காக இன்று ஒவ்வொரு ஊராக வந்து நாங்களும் உங்களுக்கு சகோதரர்கள் மாதிரிதான் என்று சொல்லி வந்து மளிகை கடை வைத்தார்கள். பின்பு கொஞ்ச நாள் கழித்து அவர்களின் உறவினர்கள் வந்து FANCY STORE, DEPARTMENTAL STORE, சூப்பர் மார்க்கெட், STATIONARY STORE, ஹோட்டல் கடை, பிரியாணி கடை, துணிக்கடை, செல்போன் கடை என்று இன்று ஒவ்வொன்றாக வைத்து எல்லா தொழிலுக்கும் வர ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் இவ்வளவு பெரும் இன்று. அவ்வளவு மக்கள் எப்படி தோன்றினார்கள். இவர்களால் இன்று எங்களது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை தட்டி பறிக்கிறார்களே இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அது மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் காலையில் நன்றாக தூங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு விடிய காலையில ரேடியோ சத்தம், தினம் தினம் போட்டு தூக்கத்தை தொலைக்க ஆரம்பித்து விட்டோம், ஆம் அந்த அளவுக்கு இன்று வளர்த்து விட்டார்களாம். ஆம் இவர்கள் ஒரே இந்தியா ஒரே மொழி (ONE INDIA, ONE LANGUAGE) என்று ஒரே மொழியில்தான் பேசுகிறார்கள். இன்னும் ஒரு தலை முறை கழித்து பார்த்தால்தான் அதன் விளைவுகள் எல்லோருக்கும் புரியும்?. நாங்களும் ஏன் அவர்களை சகோதரர்களாகவே பார்த்தோம் என்று?.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்சின் நீஸ் நகரில், தேசிய தினத்தன்று, வாணவேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் மீது, பயங்கரவாதி ஒருவன், கன்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டிச் சென்றதில், 84 பேர் கொல்லப்பட்டனர்; 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியின், தெற்கு பகுதியில், விர்ஸ்பெர்க் என்ற இடத்தில், பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அங்கு, ரயிலில் பயணம் செய்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த, 17 வயது அகதி ஒருவன், சக பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டினான்.
இதனால், பயணிகள் அலறி யடித்து ஓடினர். அங்கு வந்த போலீசார், அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில், ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஜெர்மனியில் மீண்டும் பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள முனிச் நகரில், நேற்று முன்தினம் இரவு ஒலிம்பியா வணிக வளாகத்தில் உள்ள மெக்டோன்ல்டு உணவு விடுதி அருகே, 18 வயது நிரம்பிய ஒருவன், திடீரென
அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

ஈரான் வம்சாவளி

இதில், ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலில், 16 பேர் படுகாயமடைந்தனர்; பின், தன்னையும் சுட்டு, தற்கொலை செய்து கொண்டான். ஜெர்மனில் வசித்து வரும், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அவன் மீது, குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என, போலீசார்தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அந்த கோணத்தில்
விசாரித்து வருகிறோம்' என்றனர். இதைத் தொடர்ந்து, ஜெர்மனியில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக, விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடந்து வருவதால், அதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

விவாதிக்க முடிவு

ஐரோப்பாவில் பாதுகாப்பை பலப்படுத்துவது, பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த தகவல்களை, பின்னணி போன்ற விபரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது குறித்து, ஐரோப்பிய யூனியன் கூடி விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து,அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்கள்
ஏற்கனவே எச்சரித்துள்ளன; அதன் விபரம்:சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ்., அமைப்பின் பிடி தளர்ந்து வருவதால், அங்கு போர் புரியச் சென்ற பல நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இது போன்றே ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பிய பயங்கரவாதிகள், தங்கள் தோல்வியை உள்ளூரில் தாக்குதல் நடத்தி தீர்த்துக் கொள்ளக்கூடும். எனவே, ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் தொடரக்கூடும்; அந்நாடுகள்
உஷாராக இருக்க வேண்டும்இவ்வாறு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்தியர்களுக்கு பாதிப்பில்லை

ஜெர்மனியில், துப்பாக்கிச் சூடு நடந்ததை தொடர்ந்து, முனிச் நகரில், 'இந்தியர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்' என, இந்திய துாதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்ள ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சமூக வலைதளமான டுவிட்டரில், 'ஜெர்மனியில் உள்ள இந்திய துாதர் குர்ஜித் சிங்குடன் பேசினேன். தாக்குதலில், இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை; பாதுகாப்புடன் இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளார்.

போலீஸ் அறிவுறுத்தல்

முனிச் நகரில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, வீடியோ, படங்கள் இருந்தால், தங்களிடம் ஒப்படைக்கும்படி, அங்குள்ள மக்களை, ஜெர்மன் போலீசார் கேட்டுக்
கொண்டுள்ளனர். தாக்குதலின் பின்னணியில் வேறு சிலரும் இருந்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்த தகவல்களை திரட்டுவதற்காகவே, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: