
முதல்நாள் நடந்த நிச்சயதார்த்த விழாவுக்கு மாலை ஆறுமணிக்கே சென்று ஆஜரானார், அழகிரி. மணமகள் சரயுக்கு வரவேண்டிய நிச்சயதார்த்த புடவை வருவதற்கு காலதாமதம் ஆனது. இரவு எட்டு மணிவரை மேடையிலேயே அமர்ந்து இருந்த அழகிரி, அதன்பின்பே புறப்பட்டுச் சென்றார்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து தனது மனைவி துர்காவுடன் முதல்நாளே புறப்பட்டுச் சென்றார், மு.க. ஸ்டாலின். நிச்சயதார்த்த விழாவில் மனைவியுடன் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த ஸ்டாலினுக்கு, நிச்சய நிகழ்ச்சிக்கு வந்து அழகிரி மேடையில் அமர்ந்திருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டாலின் அந்நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்தார் தனது மனைவி துர்காவை மட்டும் முதல்நாள் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார்.
மறுநாள் நடந்த கல்யாணத்துக்கு ஸ்டாலின், துர்காவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். வெள்ளுடை வேந்தராக கல்யாணத்துக்கு புறப்பட்ட அழகிரியிடம், ஸ்டாலின் தனது மனைவியுடன் திருமண வீட்டில் இருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. “தி.மு.க-வோட கட்சி நிகழ்ச்சிக்குத்தான் போகாம ஆக்கிட்டாரு ஸ்டாலின். இப்போ கல்யாண வீட்டுலகூட தலைகாட்ட முடியலேயே…” என்று தனது சகாக்களிடம் நொந்துபோய் சொல்லிவிட்டு, கல்யாண மண்டபத்துக்கு செல்வதை தவிர்த்தாராம் அழகிரி.
– சத்யாபதி
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக