செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தா.பாண்டியன் : ஜெயலலிதா சிறைக்கு போவார் ! சீ சீ இந்த பழம் புளிக்கும்

தென்காசி: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று தா.பாண்டியன் அதிரடியாக கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்த 'தோழர்' தா.பாண்டியன்தான். ஜெயலலிதா எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு மகா பொறுமையாக இருந்தவர் தா.பா.
ஆனால் அவருக்கே லோக்சபா தேர்தலில் பெரும் ஆப்பு வைத்து விட்டார் ஜெயலலிதா. இதனால் போகுமிடம் எல்லாம் ஜெயலலிதாவை விமர்சித்து வருகிறார் தா.பா.
தென்காசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்து அவர் பாவூர்சத்திரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது..
பிரசாரம் செய்தபோது, ''நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வரும். தமிழகத்தில் தற்போது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை அனைத்து கட்சிகளும் அமைத்துள்ளன.  அப்படி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி கூட அமைக்க முடியாதவாறு கம்யுனிஸ்டு கப்பலை வெறும் கற்பாறையில் மோதவைத்து டைடானிக் முடிவை தேடித்தந்த மஹா பாவி இந்த தா பாண்டி இனி என்னத்தை பேசி என்ன போன மானம் போனதுதான்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகமான பேராசை உள்ளது. 40 தொகுதிகளில் போட்டியிடும் ஜெயலலிதா எப்படி பிரதமராக வர முடியும்? தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு இனி இறங்கு முகம்தான்
கர்நாடகாவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் முடிவில் சிறைச்சாலைக்குதான் செல்வார். நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாது தமிழகம், புதுச்சேரி உளஅளிட்ட நாற்பது தொகுதிகளிலும் அதிமுக தோற்கும்.

தா.பாவின் பேச்சு முழுவதும் கிட்டத்தட்ட சாபம் போலவே அனல் பறக்க இருந்ததால் பேச்சைக் கேட்ட தோழர்கள் குஷியாகி விட்டனர் tamil.oneindia.in<

கருத்துகள் இல்லை: