ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

பிரச்சார கூட்டத்தின்போது விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு

உளுந்தூர்பேட்டை, பிரசாரத்தின் போது விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு விழுப்புரத்துக்கு சென்றார்.>
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 6.05 மணிக்கு உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனது பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார். அங்கு திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் பேசிய போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசியதாவது:-
என்னால் அதிகம் பேச முடியவில்லை மக்களே, என்னை மன்னித்து விடுங்கள். தொண்டை வலியால் அவதிப்பட்டேன், டாக்டர்கள் பிரசார கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நான் பிரசாரம் செய்வேன் என்று வந்துள்ளேன். நான் அதிகம் பேசவேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை. உமாசங்கருக்கு கொட்டும் முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள். என்னத்தை சொல்றது ? ஓவர் தீனி ஓவர் குடி ஓவர் ஆசை ஓவர் கோபம் எல்லாமே ஓவர் ஓவர் ஓவர் ! இனியாச்சும் உங்க சொந்த சகோதர சகோதரிகளை கவனியுங்க சார் ! சும்மா பீலா விட்டது போதும் !உங்க உடம்பை கவனியுங்க அது போதும்!


இவ்வாறு அவர் பேசினார்.

விஜயகாந்த் பேசும்போது தொண்டை வலியால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். தனது கட்சிக்காரர்களுடன் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்தார். தொண்டை வலி அதிகமானதை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பிரசாரத்தை 6.10 மணிக்கு முடித்துக்கொண்டு விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள மாவட்ட செயலாளர் வீட்டுக்கு மாலை 6.45 மணியளவில் விஜயகாந்த் காரில் சென்றார்.

அங்கு டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை சாப்பிட்டு ஓய்வு எடுத்தார்.

விஜயகாந்த் தொண்டை வலியால் அவதிப்பட்டதை தொடர்ந்து திருக்கோவிலூர், திண்டிவனத்தில் நடைபெற இருந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக வேட்பாளர் உமாசங்கர் தெரிவித்தார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: