புதன், 19 மார்ச், 2014

நாகராஜ் : பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் ! jeyamohan


kethetheel
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும்சாலையோரத்தில்இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்காசு கேட்பதில்லை. பணத்துக்குப்பதில் வணக்கம் செலுத்தினால்போதுமா? விசாரித்தபோதுதான்மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11மணி வரை இலவச உணவு’ (100 பேர்வரை), ‘பால் வாங்கப்பணமில்லையென்றால்குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாகபேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.
ஆச்சரியத்துடன் கேட்டால்,“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்” பெரியதத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்செய்துவருகிறார்.ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்தள்ளுகின்றனர். ’
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வடமற்றும் தென் தமிழகம், கர்நாடகம்மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்முக்கியச் சந்திப்பு. இந்தநிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர்பாட்டிலை ஜன்னல்வழியே வீசுவதைப்போலகுடும்பத்தில் பாரமென கருதப்படும்மனிதர்களை ரயிலில்அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள்பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.மாதந்தோறும் குறைந்தபட்சம் 15பேராவது இப்படி அனாதைகளாகத்தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர்.இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்சத்திரமாக இருக்கிறது.
“பசி என்றஉணர்வு மட்டும்தான் சுயநிவு இல்லாதவருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது”என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாதநிலையில் இருக்கும்முதியவர்களுக்குத் தேவையானஉணவை அவர்களது குடும்பத்தினர்வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாகருக்கிறார்.
மிகச் சின்ன வருமானத்தில்இதையெல்லா எப்படிச்சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,“இவர்களுக் கென்று தனியாகஉலைவைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாகசமைக்கிறேன். 5கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்10 கிலோ மாவு போட்டாலும்மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்இழப்புதான் என்றாலும்எனக்கு குடும்பம் நடத்தத்தேவையான லாபம் கிடைக்கிறது.மனதுக்கும் சந்தோஷமாகஇருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்‘வாடி நிற்கும்’ நாகராஜ் jeyamohan.in

சோற்றுக்கணக்க்கு

சோற்றுக்கணக்கு கடிதங்கள்


ஒரு கெத்தேல் சாகிப்


கருத்துகள் இல்லை: