திங்கள், 17 மார்ச், 2014

சாமியார் ஆசாரம் பாபுவிற்கு எதிரான சாட்சிகள் மீது ஆசிட் வீச்சு


சாமியார் ஆசாராம்பாபுவிற்கு எதிரான பாலியல் வழக்கின் சாட்சிகள் இருவர் மீது சூரத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தினேஷ் பவாச்சந்தானி(39)  எனபவர் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசராம் பாபுவிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார். இந்த நிலையில்  ராயல் ரெசிடன்ஸி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர்  ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி  தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஆசாரம் பாபுவிற்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் மீது இருவர் மீது தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி போலீசாரிடம் கேட்ட போது, பெரும்பாலான சாட்சியங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த மூன்று பேரும் போலீஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.dailythanthi.com/

கருத்துகள் இல்லை: