வெள்ளி, 21 மார்ச், 2014

ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு இறுதி வாதம் ஆரம்பம்


ஜெயலலிதா மீதான சொத்து  குவிப்பு வழக்கு! இறுதி வாதத்தை தொடங்கினார் அரசு தரப்பு வழக்கறிஞர்!
ஜெயலலிதா மீதான சொத்கு குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா முன்னிலையில் 21.03.2014 வெள்ளிக்கிழமை நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் இறுதி வாதத்தை தொடங்கினார்.
கடந்த 7ஆம் தேதி தொடங்க வேண்டிய இறுதிவாதம், பவானி சிங் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் காட்டியதால் காலதாமதமானது. இதனால் பவானிசிங்கிற்கு இரண்டு நாள் தலா ரூபாய் 65 ஆயிரம் அபராதமாக நீதிபதி விதித்தார். இதனை எதிர்த்து பவானிசிங் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு நீதிபதி சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை பெங்களூரு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. nakkheeran.in


கருத்துகள் இல்லை: