ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தேமுதிக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை: இல.கணேசன்


பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தே.மு.தி.க. எம்எல்ஏக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை மத்திய அரசு பிரச்சனைகளுக்காக அவர் அணுகி இருந்தாலும் பிரதமரால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் ஒரு தபால்பெட்டி மாதிரிதான். அவரால் தபால்களை டெலிவரி செய்யத்தான் முடியும்.
நரேந்திர மோடி அலையை பயன்படுத்தி ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம். வருவார்கள் என்று நம்புகிறோம். பா.ம.க.வுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: