ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

குஷ்பு :நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்; வெற்றி திமுகவுக்குத்தான்

திருச்சியில் தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் 36 தலைப்புகளில் 36 சொற்பொழிவாளர்கள் பேசினார்கள். ’ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம்’’ என்ற தலைப்பில் நடிகை குஷ்பு சுந்தர் பேசினார். ‘’ஆதிக்கம் செலுத்துறாங்க அம்மையார்.  நம்மை உற்சாகப்படுத்துவதற்கு தளபதி இருக்கிறாரு.  யாருக்கும் எதுக்கும் நாம பயப்படவேண்டாம்.  எத்தனை குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் எங்கள் மீது.  அத்தனையையும் பொய் என்று நிரூபிப்போம் வெற்றி திமுகவுக்கு மட்டும்தான்.   போன தேர்தலில் தமிழ் மக்கள் அவுங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தது போதும். அம்மையார் ஜெயலலிதா வெற்றி அவுங்களுக்குத்தான்னு நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்.  வெற்றி திமுகவுக்குத்தான்.  40 சீட்டை தலைவருக்கு கொடுத்துப்பாருங்கள். அம்மா உணவகமா? தமிழ்நாட்டுல எத்தனை குடும்பங்கள் இருக்கு.  அத்துனை பேருக்கும் சோறுபோட முடியுமா? மக்கள் என்ன முட்டாள்களா உங்களை நம்புவதற்கு?’’ என்று பேசினார்nakkheeran.i

கருத்துகள் இல்லை: