ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட் இயக்கம் ! சுப்பிரமணியசாமி :என்னிடம் ஆதாரம் உள்ளது ? ம்ம் தொடங்கிடிச்சு


பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:–
ஆம் ஆத்மி கட்சிக்கு தண்ணீர், மின்சாரம் போன்ற பிரச்சினைகள் தவிர, குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த கொள்கையும், குறிக்கோளும் கிடையாது. ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட்டு இயக்கம் ஆகும்.
இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 'ஸ்வராஜ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் நக்சலைட்டுகளின் கொள்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு பகுதியையும் காலனியாக மாற்றி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
காஷ்மீர் பற்றி ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர்களுக்கு நமது நாடு ஒரே நாடு என்று தெரியவில்லை. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வசிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: