புதன், 19 பிப்ரவரி, 2014

கபில்சிபல் : உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்கும்:ராஜீவ் கொலை வழக்கு,


இதுபோன்ற தீர்ப்புகள் தீவிரவாதிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது. நான் இதை யாருக்கும் எதிராக சொல்லவில்லை. அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ஜ.க.வினர், ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக மத்திய மந்திரி கபில் சிபல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருமாறு:-
ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.
மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் தீவிரவாதிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது. நான் இதை யாருக்கும் எதிராக சொல்லவில்லை. அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ஜ.க.வினர், ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்ற காலம் தாழ்த்தப்பட்டபோது அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்த பா.ஜ.க. இப்போது ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிப்பது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: