இந்த வருடமும் அப்பட்டியலை வெளியிட்டுள்ளது, 'இந்தியா டுடே'.
தமிழகத்தின் பலம் மிக்கவர்கள் செல்வாக்கு படைத்தவர்கள் 2011 பட்டியலில் 10 பேர் அடங்கியிருக்கிறார்கள். பத்து பேர் அடங்கிய அப்பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இடம் பெற்றுள்ளார்.
இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள நக்கீரன் கோபால் குறித்து இந்தியா டுடே, 'புலனாய்வுப் புலி' என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், 'புலனாய்வுப் பத்திரிகைகளுக்கு ஒரு கௌரவ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் நக்கீரன் கோபால். ஏனெனில் புலனாய்வு செய்திகளுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை சமூகநீதிக்கும் தருகிறது நக்கீரன். அதனால்தான் கடந்த ஆண்டின் தந்தை பெரியார் விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கியது. ஏனெனில் புலனாய்வு இதழ் விற்பனை வரலாற்றிலும் சாதனை நிகழ்த்தியவர் கோபால். நித்யானந்தா விவகாரம் இடம்பெற்ற நக்கீரன் 5 லட்சம் பிரதிகள் விற்றது' என்று குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக