சனி, 24 செப்டம்பர், 2011

30 மாதங்களில் 669 தமிழ் பொலிஸார் வட பகுதிக்காக இணைப்பு

இலங்கை மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வை நீக்குவதற்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புகள் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாறாக இராணுவத்தினருக்கு எதிரான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் தற்போது குறைந்த அளவிலான இராணுவத்தினரே கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த 30 மாதங்களில் 669 தமிழ் பொலிஸார் வட பகுதிக்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையின் போது சுட்டிக்காட்டினார். இதன்படி இலங்கையில் 1,143 தமிழ் பொலிஸார் தற்போது கடமையில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: