
எனினும், மத வழக்கங்களுக்கு தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீயக்ஸ் நகரில் பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் நேற்று அபராதம் விதித்தது. ஹிந்த் அமாஸ் (32) என்ற பெண்ணுக்கு 120 யூரோவும், நஜாத் நய்த் அலி (36) என்ற பெண்ணுக்கு 80 யூரோவும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக இவர்கள் கூறியுள்ளனர். அபராதத் தொகை ஒரு பிரச்னையே அல்ல. ஆனால், எங்கள் மதவழக்கங்களை பின்பற்றுவதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என்றார். பிரான்ஸ் தவிர பெல்ஜியம், இத்தாலியின் சில நகரங்களிலும் பர்தாவுக்கு தடை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக