வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பிரித்தானியாவில் இருந்து 150 தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்?

அரசியல் அந்தஸ்த்துக் கோரி தமது நாட்டில் தஞ்சமடைந்த மேலும் சில இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட சுமார் 150 இலங்கைத் தமிழர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எதிர்வரும் 28ம் திகதி தனியான விமானமொன்றில் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய குடிவரவு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து மறுக்கப்பட்ட சில இலங்கையர்கள் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: