வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கள்ளத்தனமாக மாடு வெட்டுபவர்களின் கைகளை வெட்டுவதாகவே

கள்ளத்தனமாக மாடு வெட்டுபவர்களின் கைகளை வெட்டுவதாகவே கூறினேனே தவிற முஸ்லிம்கள் மாடுகள் அறுப்பது தொடர்பில் நான் குறிப்பிடவில்லை : அமைச்சர் மேவின் சில்வா!

கள்ளத்தனமாக மாடு வெட்டுபவர்களின் கைகளை வெட்டுவதாகவே கூறினேனே தவிற முஸ்லிம்கள் மாடு அருப்தைப்பற்றி நான் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். கொழும்பு தெவட்டகஹ தர்கா மற்றும் பள்ளி வாயலுக்குச் சென்ற அமைச்சர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படியே மாடு அறுக்கின்றனர்.அதில் தவறில்லை. அவர்களது மார்க்கக் கடமையாகிய ‘குர்பானை’ அவர்கள் உணவாகக் கொள்கின்றனர். ஆனால் மிருக பலி, கள்ளத்தனமாக மாடு வெட்டுவது என்பன வேறு கதை.
நாhன் குறிப்பிட்டது முஸ்லிம்கள் மாடு அறுப்பதை அல்ல. கள்ளத்தனமாக மாடு அறுக்கும் கள்வர்களையே குறிப்பிட்டதாகத் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: