சனி, 21 மே, 2011

கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி

கனிமொழி எம்.பி.யின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, அதற்கான காரணங்களை 144 பக்க உத்தரவில் விளக்கி கூறி இருந்தார்.
 முடிவில், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் கனிமொழி கண்ணியமாக நடந்து கொண்டதற்கு தனது சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.

பெண் என்பதற்காக ஜாமீன் மனுவில் சலுகை காட்ட முடியாது என்று கூறியபின், இந்த பாராட்டை நீதிபதி தெரிவித்தார்.

கனிமொழியின் கண்ணியமிக்க நடத்தைக்காக அவருக்கு சில சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அப்போது நீதிபதி சைனி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: