
இதுதான் எனக்கு சென்னை புத்தகக் கண்காட்சியில முதல் அனுபவம்.சனிக்கிழமை போயிருந்தேன். சென்டரலிலிருந்து நேரா பச்சயப்பாஸ்தான். ரெண்டு மூணு வருசங்களுக்கு முன்னாடி இதுபோல கண்காட்சிக்கு முன்னே பழைய புத்தகங்களை விற்கவிடாம பண்ணிட்டாங்கன்னு ஒரு பேச்சிருந்துச்சு. இந்த தடவை ரொம்பவும் அதிகமாவே பழைய புத்தகங்கள் இருந்தது. விலையும் கம்மி. கொஞ்ச நேரம் அங்க ஓட்டிட்டு கண்காட்சிக்குள்ள போன நம்ம விக்ரம் வரவேற்றார். ஆச்சிரியத்தோட கொஞ்ச தூரம் மேற்கொண்டு போனா தமன்னா இருந்தாங்க...என்னடாயிதுன்னு யோசிக்கும்போதே வரிசை இளையராஜால ஆரம்பிச்சு ரஹ்மான்ல முடிஞ்சது. உபயம்: குமுதம். எங்க திரும்பிலாம் அவர்களின் போஸ்டர் கண்ணில் அடித்தது


அப்பறம் அம்பேத்கர் ஸ்டாலுக்கு போய் ஒரு புத்தகத்தை வாங்கினேன். எல்லாம் மிகவும் விலை குறைவு. இதுல இன்னொன்னு, காந்தியின் சத்திய சோதனையும் இன்ன பிற புத்தகங்களும் அம்பேத்காரின் புத்தகங்களும் பெரியாரின் புத்தகங்களும் கூடவே இஸ்லாம் புத்தகங்களும் கீதை ஆகிய அனைத்தும் மிகவும் விலை குறைவு. ஏறத்தாழ ஒரே விலை. what an irony...


சரி வேணாம்னு Oxford ஸ்டாலுக்குள்ள நொலஞ்சா நா விரும்பிய புத்தகங்கள் 500,600 ரூபாய்ன்னு இருக்கு. வெறும் வாசனையை மட்டும் நுகர்ந்திட்டு வந்திட்டேன். காலச்சுவடுக்குள்ள போனாலும் இதே கதைதான். ரொம்பவும் விலை. எனக்கு கட்டுபடியாகவில்லை. குங்குமம் புத்தகக் ஸ்டாலில் ஏதோ சமைக்கும் பொருட்கள் எல்லாம் கொடுத்திட்டிருந்தாங்க. Induction அடுப்பு இருந்ததான்னு தெரியல..வீட்டுக்கு வாங்கணும். பல நல்ல தமிழ் பெயருடன் நிறைய ஸ்டால்கள் இருந்தது. பழனியப்பா பிரதர்ஸ்ல நரசய்யாவின் ஆலவாயும் மதராச பட்டினமும் வாங்கணும் ஒவ்வொரு முறை நினைத்து பின் வேண்டாம்ன்னு போவதே வாடிக்கையாக போயிருச்சு. ஒருவழியாக நான்கு மணிநேரத்திலேயே என் திக் விஜயம் முடிவுக்கு வந்தது.
அமைப்பாளர்கள் ஸ்டால்களை வட்டவடிவமாகவோ Z வடிவிலோ வெச்சா நல்லாயிருக்குனும்னு தோணுது. இது எனக்கு சிரமமாயிருந்தது.கிட்டத்தட்ட 450 ஸ்டால்களுக்கும் மேல என்று நெனைக்கிறேன். ஆனா பெரும்பாலும் சில குறிப்பிட்ட புத்தகங்களே பல ஸ்டால்களிலும் நிறைந்திருந்தது. தனித்துவமான புத்தகங்களோ புத்தகக் கடைகளோ குறைவாகவே இருந்ததாக நான் உணர்ந்தேன். இது என் தவறாகக் கூட இருக்கலாம். Quantity is there..but Quality??. தரத்தை நான் நிர்மானிக்க முடியாது-கூடாது என்றாலும் பார்த்தால் ஓரளவிற்கு தெரியுமில்லையா..மேலும் கழிவு 10% மட்டுமே. இதே அளவிற்குதான் எங்கள் ஊரிலும் வாடிக்கையாகவே தராங்க. என்னைப் போல பல பேருக்கும் பொருளாதார நிலைமை யோசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு லேமன்டீக்கு கூட 15ரூ எனக்கு அதிகமாகவே தெரிந்தது.இன்னொரு நல்ல விஷயம் தண்ணீர் ஏற்பாடு பிரமாதம். மினரல் வாட்டர் வாங்குவதற்கு பதில் அங்கே இலவசமாகவே சபோல்ஸ் மினரல் வாட்டர் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.வெளிய, பஜ்ஜி பேல் பூரி சாப்பிடுவதில் நிறைய பேர் முனைந்திருந்தார்கள்.பின்ன...பசிக்காதா...
ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே மாதிரி புத்தகங்களே நிறைய இருந்தது சோர்வைத் தந்துது. ஒரு கோடி புத்தகங்களில் தொண்ணுற்று எட்டு லட்சம் புத்தகங்கள் ஒரே வகையாக இருந்த மாதிரி தெரிந்தது. இது என்னோட பார்வைக் கோளாறான்னு தெரியல.போனவங்க யாராவது இதுபோல உணரந்தீங்களான்னு தெரியல.அமைப்பாளர்கள் ஸ்டால்களை – புத்தக எண்ணிக்கைகளை விட அரிதான, புதிய வகையான புத்தகங்களை அறிமுகப்படுத்தினால் நல்லாயிருக்கும் என்பது என் கருத்து. நாங்க(அப்பா+நான்) எப்படி இருந்தாலும் மாதாமாதம் ஒரு நான்கு அல்லது அஞ்சு புத்தகங்களை வாங்கிருவோம்.அதுனால அடிக்கடி புத்தகக் கடைக்கு போய்போய் ஓரளவு அனைத்து புத்தகங்களும் பரிச்சயமானதாகவே இருந்தது.
என்னைப் போல அல்லாமல் பல வேறு காரணங்களினால் புத்தகக் கடைகளுக்கு போக இயலாதவர்களுக்கு இது போன்ற கண்காட்சிகள் நிச்சயமாக ரொம்பவே பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுபோக நிறைய சின்னப் பசங்களும் பெற்றோர்களுடன் வருவதை பார்க்க ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. என்ன மாதிரி புத்தகங்களை வாங்குகிறார்கள் என்று பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அவரவர் ரசனை அவரவர்களுக்கு. மற்றவர் ரசனையை மதிப்பிட எனக்கு எந்த உரிமையுமில்லை என்று தோணுது.
கடைசியா நான் வாங்கிய புத்தகங்களை சொல்லாட்டி எப்படி..ஒரு சுயவிளம்பரம் இல்லாட்டி அப்பறம் தமிழன்னு சொல்லுவதில்ல என்ன பெருமையிருக்கு
- இளைஞகர்களுக்கான புத்தர் – NBTஎஸ்.பட்டாச்சாரிய - NBT
- நம் காலத்து நாவல்கள் – எஸ்.ரா – உயிர்மை
- அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது – எஸ்.ரா – உயிர்மை (எஸ்.ராவிற்கு பெரிய ரசிகன் என்றுலாம் நினைக்க வேண்டாம்)
- கஸ்தூரிபா: மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள் – மைதிலி சிவராமன் – பாரதி புத்தகாலயம்
- சனங்களின் சாமிகள் கதை – அ.கா.பெருமாள் – United Writers
- சூடிய பூ சூடற்க – தமிழினி – யாருடையதுன்னு உங்களுக்கே தெரியும்
- மலேயா முதல் கனடா வரை – ஏ.கே.செட்டியார் – அகல் பதிப்பகம்
- Earthquake: Forecasting & Mitigation – NBT ( இது என் வேலைக்கு )
- தீண்டப்படாதவர்களுக்கு காந்தியும் காங்கிரசும் சாதித்தது என்ன? – அம்பேத்கார் நூல் தொகுப்பு: 16. (ரொம்ப நாளா தேடியது)
பல பேரின் முகங்களை வலைப் பதிவில் பார்த்தது போல இருந்தாலும், எப்படி பேசுவதுன்னு எனக்கு தயக்கமாகவே இருந்தது. இந்த விசயத்தில் நான் கொஞ்சும் கூச்சவாதி. அப்பறம் நா ஒண்ணும் பெரிய படிப்பாளி எல்லாம் கிடையாது. கையில கிடைப்பதை படிப்பேன். அதுனால பல சிரமங்களுக்கு இடையேயும் புத்தகங்களை பதிப்பித்துக் கொண்டும் வெளியிட்டுக்கொண்டும் இருக்கும் பதிப்பாளர்களை குறை சொல்லுவது போல எங்காவது தொணி தெரிந்தால் பொறுத்தருள்க.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக