செவ்வாய், 17 மே, 2011

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

சென்னையை அருகே உள்ள படப்பையில் நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பொருள்கள் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளனர். சுற்றிலுமிருந்த பொருள்கள், பூந்தொட்டிகளையும் உடைத்துத் தள்ளினர்.

மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வடிவேலுவின் சென்னை வீடு, மதுரை வீட்டையும் ஏற்கெனவே தேமுதிகவினர் தாக்க முயற்சித்து வருகின்றனர். இதனால் அவர் மதுரையிலேயே தங்கியிருக்கிறார்.
English summary
An unidentified gang has entered in to actor Vadivelu's farm house near Padappai and ransacked the house. They made damages to the house and broke the glasses of all the windows and other materials.

கருத்துகள் இல்லை: