வியாழன், 19 மே, 2011

Midnight's Children மிட் நைட் சில்ரன் இலங்கையில் படமாக்கப்பட்டது

சல்மான் ருஷ்டியின் பரிசு பெற்ற மிகப் பிரபலமான நாவலான மிட் நைட் சில்ரன் படபடிப்பு இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பயர், வாட்டர், போன்ற சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கிய தீபா மேத்தா இறங்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் ஷபனா ஆஷ்மி, நந்திதா தாஸ், சீமா பிஸ்வால், இர்பான் கான், சோகா அலி கான், சந்தன் ரோய் சஞ்சய் போன்றோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

முதலில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த பின்னர் குறித்த படப்பிடிப்பு குழு மற்றும் நடிகை மற்றும் நடிகர் குழு நம்பிக்கை பிரேரணையொன்றில் கையெழுத்து இட்டபின்னர் படப்பிடிப்பு வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த படப்பிடிப்புக்கு ஈரான் எதிர்ப்பினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: