
சவப்பெட்டியை தூக்கி சென்றது தொடர்பான வழக்கில் மாணவர்கள் 4 பேருக்கு கண்டி நீதிமன்றத்தில் 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கப்பட்டமைக்கு எதிராகவே இன்று இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். பேராதனை பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் மற்றும் கலைபீட மாணவர் சங்க தலைவரும் இவ்வழக்கில் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டகாரர்கள் கண்டி கொழும்பு பிரதான வீதியை தடை செய்து ஆர்ப்பாட்டம் செய்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டு பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் பங்குபற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக