புதன், 22 செப்டம்பர், 2010

அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகவும் கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாக

தாய்லாந்தில்  சுற்றிவளைப்பு கர்ப்பணித் தாய்,  நான்கு குழந்தைகள் உட்பட 13இலங்கை அகதிகள் கைது..!
தாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில் தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த 13இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அகதிகளுள் நான்கு குழந்தைகளும், ஒரு கர்ப்பணித் தாயும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். இன்றுகாலை 11.30அளவில் குறித்த பிரதேசத்தினை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2வது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்றும், அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகவும் தெரிவித்ததுடன், குறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: