சனி, 25 செப்டம்பர், 2010

ஆயுதம் விற்றவர்கள் 72 ராணுவ அதிகாரிகள் ; சுப்ரீம் கோர்ட்டில்

புதுடில்லி: ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 72 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயுதங்களை வெளியாட்களுக்கு விற்று காசாக்கியுள்ளனர். இது தொடர்பாக ராணுவ விசாரணை மைய அதிகாரிகள் விசாரித்து உண்மை நிலையை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் பிரமாணம் தாக்கல் செய்துள்ளனர். இந்த விஷயம் மிக சீரியஷான விஷயம் இப்படி நடந்திருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கோர்ட் ஆச்சரியம் தெரிவித்துள்ளது.
ராணுவ தளபதி மற்றும் மூன்று துணை ராணுவ தளபதிகளும் அடங்குவர். ராஜஸ்தான் மாநிலம் எல்லையோர மாவட்டத்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் பூடானில் உள்ள இந்தியன் ஆர்மி டிரெய்னிங் டீமை சேர்ந்தவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கர்னல் நீரஜ்ரானா 5 ஆயுதங்கள்,  லெப்டினன்ட் கர்னல் வி.எஸ்,. ரத்தோர் 17 ஆயுதம், லெப்டினன்ட் கர்னல் எஸ்.எஸ்.ரத்தோர், 5 ஆயுதம், பி.எஸ்., ஷெகாவத் 11 ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது நிருபணமாகியுள்ளது. இவற்றில் 10 ராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.25 ராணுவ அதிகாரிகள் பூடான் பகுதியில்உள்ள இந்தியன் ஆர்மி டிரெய்னிங் டீமில் பணிபுரிகின்றனர்.

35 அதிகாரிகள் மற்றும் ஒய்வு பெற்ற 10 அதிகாரிகளை விசாரைணைக்கு அழைக்கப்பட்டு ராணுவ சட்டத்தின்படி விசாரணை நடத்தப்படுவர் என சுப்ரீம் கோர்ட்டுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது ராணுவவிசாரணை மையம். பொது நல வழக்கை தாக்கல் செய்த சர்மா கூறுகையில் இந்த சட்டவிரோதமான செய்ல் தொடர்பான வழக்கை முக்கியவழக்காக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
விஜய் - சென்னை,இந்தியா
2010-09-25 15:25:13 IST
இந்தியாவில் இதெல்லாம் பெரிய குற்றமா ? ஆட்சியாளர்கள் செய்த தவறுகளையா இவர்கள் செய்து விட்டனர்....
கண்ணன்.k - Aruppukkottai,இந்தியா
2010-09-25 14:45:52 IST
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம். உரிமையற்ற அகதிகளாக நம் நாட்டில்தான் வாழவேண்டும். எந்தவித சொத்தும்,குடியுரிமையும் இல்லாமல் . நீர், இடம் , இல்லாமல் . இந்திய அன்னையின் கற்பை விற்ற கவோதிகள் உயிருடன் சாக வேண்டும் ....
கண்ணனுக்கு அண்ணன் - சவுதிஅரேபியா,இந்தியா
2010-09-25 14:32:58 IST
All military people from Top to Bottom, They steal India. How ? from Go-Down they sell all arms to Terrorist outfit and put godown underfire. Steal all important spare parts of Air craft and finally make accident and write in the log book as if spare parts changed. If any good Soldier found these things, kill him in his quarters and declare in public,he was dead while doing excersise or cleaning the weapons. Are you Indians, shame shame and hell should take all you people by making Eathquake or Flash Flood....
ramamurthi - dubai,இந்தியா
2010-09-25 14:29:15 IST
If it is true must be hanged all of them...
ANGEL - AlAin,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-25 14:23:54 IST
ராணுவத்தில் உள்ள சில மானம்கெட்டவர்கள் செய்கின்ற இது போன்ற இழி செயல்களால் நல்லவர்கள் மீதும் சந்தேகபட வேண்டியுள்ளது. ஓரு சொரனை இல்லாத அரசியல் கட்சி நாங்கள் தான் இந்தியாவையும், இந்து மக்களையும் காப்பாற்றுகிறோம் என பீற்றிக்கொள்ளும் இவர்களுக்கு இதுபோன்ற காரியங்கள் அவர்களுக்கு தெரியவில்லையா, இதை செய்தவர்கள் யார் என்பதை மடையர்கள் புரிந்து கொள்ளட்டும்!...
கார்த்தி கா மேல்மலையனூர் - மேல்மலையனூர்,இந்தியா
2010-09-25 14:20:05 IST
இந்தியன் எதற்கும் துணிந்தவன் என்பதையே காட்டுகிறது...
முக்குந்தன் - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-25 14:12:01 IST
இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பில் அனைத்துமே ராணுவத்தில் பயன் படுத்தக்கூடியவை என்று பல முறையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை ....
muthukkumaraswamy - dubai,இந்தியா
2010-09-25 14:03:19 IST
கூடிய சீக்கிரம் இந்தியாவை இந்த அரசு மத்த நாட்டுக்கு வித்து காசாக்கி விடுவாங்க போல....
nalavirumpi - riyadth,சவுதி அரேபியா
2010-09-25 13:55:01 IST
நாம பேசி பேசி அழிந்து கொண்டு வருகிறோம். இவர்கள் ஆயுதங்களை வெளி நாட்டுக்கு விற்றார்களா அல்லது இந்திய எதிரிகளுக்கு விற்றர்களா .அல்லது நம் நாட்டு காவி திவிரவதிக்கழுகு. இவை அனைத்தும் நம் நாடு அழிவதற்கு வழிவகுக்கும். இவர்களை thugkilitawentum . அனைத்து சட்டங்களும் திருதபட வேண்டும் . அரசியல்,பொது, அனைத்திலும் இலைஞர்கள் வர வேண்டும் . அப்பத்தான் நம் நாடும் காப்பாத்தப்படும் ...............
tamilan - uae,இந்தியா
2010-09-25 13:43:51 IST
இவனுங்கள எல்லாம் நாடு கடத்தனும். திருட்டு பசங்க...
syed - riyadh,சவுதி அரேபியா
2010-09-25 13:25:56 IST
வெளங்கிடும் இந்தியா. நம் நாட்டில் எதுவும் செய்யலாம். தண்டனை ஒன்னும் இல்லை. இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை....
கிருஷ்ணா - Riyadh,சவுதி அரேபியா
2010-09-25 12:53:52 IST
லஞ்சம் கொடுத்து வேளையில் சேருவது ராணுவத்திலும் இருக்கிறது. அப்படி serubavargal நாட்டை எப்படி kaappar? மேல்மாட்டதில் மட்டும் alla, கீழ் நிலையில் உள்ள டிரைவர்கள்,ராணுவ ரேஷன் அதிகாரிகள், சிப்பாய்கள் என anaithu பிரிவினரும் தங்களால் ஆனா மட்டும் கொள்ளை அடிக்கின்றனர். ஒவ்வொரு ராணுவ வீரரும் oorukku வரும்போது பார்த்தல் தெரியும் avargal தாங்கள் பனி புரியும் idathil இருந்து என்ன என்ன பொருட்களை தூக்கி கிண்டு வந்தனர் என்பது. !!! இதில் இவர்களை தூக்கி வைத்து கொண்டாட்டம் வேறு...நாட்டை காக்கிறார்கள் என்று..... போங்கடா டேய் போய் பிள்ளை குட்டிகள padikka வச்ச லஞ்சம் குடுத்து வேலைக்கு சேர்த்துவிட்டு எப்படி லஞ்சம் vaangurathunu கத்து குடுங்கdaaa.......
கே seshadri - chennai,இந்தியா
2010-09-25 12:41:12 IST
The true citizens of India. Probe results may get extended to link with some political heads. Now a days no b(l)ody is honest to the services what they are selected for. It spread in all the field right from gvot, judiciary, defence .....etc. Shame for the nation and ther is no fool proof system to trace it at the earlier stages. The deal was going on for quite some time unnoticed. God only can save India from the clutches of these type of greedy....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-25 12:39:30 IST
அரசியல்வாதி ஆயிற்று; காவல்துறை ஆயிற்று; நீதித்துறை ஆயிற்று; இப்போது ராணுவமும் ஊழலில்; கலாம் அவர்களே, நிஜமாக சொல்லுங்கள், இந்தியா வல்லரசாகுமா? வெறும் பகல் கனவுதானா?...
MARAKAYAR - riyadh,சவுதி அரேபியா
2010-09-25 12:38:45 IST
வேலியே பயிரை மேய்கின்றது. அரசாங்க பதவியில் இருக்கும் அதிகாரிகளை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் ,...
venkat - mahalapye,போஸ்ட்வானா
2010-09-25 12:07:34 IST
நம்ம நாடு எப்ப தண்டனையே உடனை செய்ய போகுது? இதை இழு இழு என இழுத்து கடைசியில் ஒன்னும் ஆக போவது இல்லை .விப்பவர்கள் தாரளமா தொழிலை செய்யலாம். இன்னும் 30, 40 வருடம் கழித்து தீர்ப்பு சொல்வார்கள் சோ டோன்ட் வொரி .எப்போ இந்தியன் வெக்கபட போறான்? நம்ம நீதிபதிகள் எப்போ மக்களோடு மக்களாக சிந்திப்பார்கள். நல்ல சம்பளம் பாதுகாப்பு பிறகு என்ன அவர்களுக்கு....
ராதா கிருஷ்ணன் - chennai,இந்தியா
2010-09-25 11:41:39 IST
நமது கல்வியில் இறை பக்தி , தேச பத்தி எள்ளளவும் இல்லை. அனைத்திலும் பணம் சம்பாதிக்கும் முறைகளே உள்ளன. எனவே அனைவரும் அனைத்திலும் பணம் சம்பதிக்கின்றனர். தப்பு முதலில் எங்கிருந்து ஆரம்பிகிறது என்பதை கண்டு கொண்டு முதலில் அதை நிவர்த்தி செய்யுங்கள், இல்லையெனில் இதுபோலே தவறுகள் தொடரும் ஜெய் ஹிந்து ....
2010-09-25 11:22:38 IST
அன்புள்ள பாவப்பட்ட இந்தியர்களே...!!! நம் நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது.. எவ்வளவு கீழ்த்தரமான செயல்களை செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தாயிற்று. எவருக்கு தெரியும் நம் இந்தியாவை யாரேனும்(அரசியல்வாதி / இராணுவ அதிகாரிகள்) வெளிநாட்டவருக்கு விற்றிருக்கலாம். i feel shame that we are having very worst goverments in central as well as state. i want to kill each one who is doing this kind of bull shit......
அரசிளங்குமரன் - Tanbaram,இந்தியா
2010-09-25 11:12:56 IST
என்ன அநியாயம். வேலியே பயிரை மேய்வதா? இராணுவ அதிகாரிகளே தேசதுரோக செயல்களுக்கு துணை போவதா ?? இவர்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும்.... ஆ .....ரத்தம் கொதிக்குதே . . ....
Kim - Tn,இந்தியா
2010-09-25 11:08:57 IST
ஹ ஹ ஹ ஹ ஹா எல்லோரும் நல்லt சிரிங்க. சிரிச்சுட்டு காரி துப்புங்க இவனுக மேல...
நௌஷாத் - மேலப்பாளையம்,இந்தியா
2010-09-25 11:01:32 IST
இது என்ன பெரிய செய்தி நம் நாட்டை சீனக்காரன் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கிறான். அபாயம் மிகுந்த மின் கழிவுகளை பொடியாக்கி விமானத்தில் இருந்து தூவுகிறான். இந்திய அரசு, மிலிட்டரியிடம் கண்டுகொள்ளாதே என்றும் அந்த இடத்தை விட்டு நகருமாறும் கட்டளை இடுகிறது. வோட்டுக்காக காலம் காலமாய் பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம் என்று பேசியே ஏகப்பட்ட பகையை சம்பாதித்து விட்டோம். நம்மை சுற்றியும் நாலா புறமும் எதிரிகள். நம்மால் இனி பாகிஸ்தானையோ பங்கள்தேஷையோ ஸ்ரிலங்காவையோ நேபாளதையோ ஏன் பூடானைகூட மிரட்ட முடியாது. ஏன் என்றால் எல்லா நாட்டிலும் சீனாக்காரன் உள்ளான். இதை தான் முன்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சொன்னார் நமக்கு உண்மையான எதிரி சீனாதான் என்று....

கருத்துகள் இல்லை: