வியாழன், 23 செப்டம்பர், 2010

அம்பாறை , பாடசாலையினுள் நுழைந்த துப்பாக்கிதாரி ஆசிரியை சுட்டுகொன்று தானும் தற்கொலை.

அம்பாறை மாவட்டம் சியம்பலாஆண்டுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரி ஒருவர் பாடசாலையின் ஆசிரியையை சுட்டுக்கொன்றுவிட்டு தனக்கு தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவருமே 25 வயதினை அண்மித்திருந்தவர்கள் என தெரிவிக்கும் பொலிஸார் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: