செவ்வாய், 13 ஜூலை, 2010

சுகன்யா வழக்கை 2 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என்றும் குடும்ப நல நீதிமன்றத்திற்க

நடிகை சுகன்யா தனது கணவர் மீது வழக்கு தொடுத்திருந்தார்.  இதையடுது அவரது கணவரின்  மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
‘’அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றதால் தமிழ்நாட்டில் வழக்கு போட  தடை விதிக்க வேண்டும்.  சுகன்யாவின் மனுவை தள்ளுபடி செய்துவிடவேண்டும்’’ என்று சுகன்யாவின் கணவர் மேல் முறையீடு செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,  ‘’வெளிநாட்டில் திருமணமானாலும் ஒரு பெண் வாழும் ஊரில் வழக்கு போடலாம்’’ என்று மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்,  ‘’சுகன்யா வழக்கை 2 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என்றும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: