
இந்த வெற்றிக் கொண்டாடத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாநகரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று அக்கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈபி ரவி தலைமை தாங்கினார். பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினார்கள். 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 1996 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனர். அதுபோல ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. முதல்வர் ரகுபர் தாஸ்க்கு தோல்வியை வழங்கி பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக