திங்கள், 10 ஜூன், 2019

சிறுமி ஆசீபா பாலியல் வன்கொலை வழக்கு! மூவருக்கு ஆயுள் தண்டனை மூவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் ...

தீபிகா சிங் ராஜவத்..அச்சுறுத்தல்களையும் எதிர்ப்புகளையும் கடந்து 
ஆசிஃபாவின்' படுகொலைக்கு நீதியை பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர் ...

news18 com : கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் மூன்று பேருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். காஷ்மீரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசியக்கொடியுடன் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தியது.அந்த பேரணியில் பா.ஜ.கவைச் சேர்ந்த மாநில அமைச்சர்களும் கலந்துகொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.


இந்த வழக்கின் விசாரணை ஜூன் 3-ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏழு பேரில் ஆறு பேரை குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் காலையிலேயே தீர்ப்பளித்தது.  தற்போது, குற்றவாளிகளுக்கானத் தண்டனை விவரத்தை அறிவித்தது.

அதன்படி, ஊர்த் தலைவரும் கோயில் பூசாரியுமான சஞ்சி ராம், தீபக் கஜூரியா, பிரவிஷ் குமார் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக தலைமைக் காவலர் திலக் ராஜ், துணைக் காவல் ஆய்வாளர்கள் ஆனந்த் தத்தா, சுரிந்தர் வர்மா ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: