
பல்வேறு கட்ட விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதமே சிங்காரவேலன் ஆணையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும், ஆனால் இந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஐடியின் விசாரணையின் தரவுகளை வைத்து, சிங்காரவேலன் ஆணயம் இந்த மரணம் தற்கொலை என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், இளவரசனின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணையிலும் தற்கொலை என்றே முடிவு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இளவரசன் கைகடிகாரம் நின்றுபோன நேரமான 1.20 மணிக்கு குர்லா எக்ஸ்பிரஸ் கடந்து சென்றதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனம் உடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் எனவும் சிங்காரவேலன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக