

இந்த காட்சி சாலையில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு இருசக்கர வாகனத்தில் கிளாட்சன் மற்றும் விக்ரம் என்ற 18 வயதான கல்லூரி மாணவர்கள் 2 பேர் வந்திருக்கிறார்கள். மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் வயது 40, அவருடைய மனைவி சாந்தி என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலரும் அந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய 4 பேரில் 3 பேர்
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆறுமுகம்,
சாந்தி, கிளாட்சன் ஆகிய 3 பேருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் 18 வயது நிரம்பாத
பள்ளி மாணவன் பெற்றோருக்கே தெரியாமல் காரை எடுத்து வந்து ஓட்டியது தெரிய
வந்துள்ளது. இந்த கார் அங்கு மட்டுமல்லாது அம்பேத்கர் நகர் என்ற
இடத்திலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் வந்ததாகவும்
கூறப்படுகிறது. காருடன் தப்பிச் சென்ற அந்த 18 வயது சிறுவனை போலீஸார்
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக