சனி, 15 ஜூன், 2019

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார் .. புளித்த மாவு விவகாரம்: மளிகைக் கடைக்காரரால்

  எழுத்தாளர் ஜெயமோகன்  தாக்கப்பட்டார்tamil.news18.com: நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன், 60; தமிழ் மற்றும் மலையாளத்தில், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர், பல்வேறு திரைப் படங்களுக்கு, வசனம் எழுதி உள்ளார்...
நேற்று இரவு, பார்வதிபுரத்தில் உள்ள  மளிகைக் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்துப்போனதால், திரும்பி தந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது அங்கிருந்த கும்பல், எழுத்தாளர் ஜெயமோகனை அடித்தது. வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகளுக்காக பல விருதுகள் பெற்றவர். சில சினிமாக்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.  கடைக்காரர்களால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று வருகிறார்

கருத்துகள் இல்லை: