மேலும் தம் கடைசி மகளின் கலியாணம் என்பதால் கணக்குப்பார்காமல் செலவழித்தார். அந்த நிச்சயதார்த்தத்தில் இசை கச்சேரியும் நடந்தது. அதில் தானும் பாடக்கூடியவர் என்பதால் மற்ற இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து மேடையில் மைக் பிடித்து பாடத் தொடங்கினார்.
அப்போது திடீரென்று மேடையிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் மகள் ஆர்ச்சாவும் கதறி அழுதார், பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.>மருத்துவனையில் விஷ்ணுபிரசாத்தை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால் நாளை ஆர்ச்சாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதால், விஷ்ணுபிராசத்தின் கடைசி ஆசை அது வென்பதால், அவரை மருத்துவனையில் சிகிச்சை பெறுவதாக ஆர்ச்சாவிடம் கூறிவிட்டு நல்லபடியாக திருமணத்தை நடத்தினர் உறவினர்கள்.
திருமணத்திற்கு உண்டான அனைத்து சடங்குகளும் முடிவடைந்த பின்னர்தான் ஆர்ச்சாவுக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஆர்ச்சா கதறி அழுந்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக