
உண்மையில் நேசமணிக்கு என்னதான் ஆச்சு?
`Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' எனக் கேட்க விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம்' எனப் பிரபல ஃபிரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட் செய்தார். அதன்பின்னர் நடந்ததெல்லாம் இந்த உலகம் அறியும்.

Photo: Twitter Moments India
நேசமணியின் இந்த நிலைக்கு காரணமானவர் யார் என்றால் அது விக்னேஷ்
பிரபாகர் என்னும் சிவில் இன்ஜினீயர். ஏன் பாஸ் நேசமணியை இப்படி
பண்ணினீங்க... நீங்க யாருன்னு அவரிடமே கேட்டோம். ``என் பேரு விக்னேஷ்
பிரபாகர். தூத்துக்குடி மாவட்டத்துல புதூர்தான் சொந்த ஊரு. ஸ்கூல்
படிச்சதெல்லாம் அருப்புக்கோட்டையில.. சிவகாசி காலேஜ்ல சிவில்
இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சிட்டு ஊர்ல வேலைப்பாத்துகிட்டு இருந்தேன்.
அப்பா, 10 வருஷமா துபாய்ல வேலை பாத்தாங்க. அப்பா மூலமா துபாய்ல வேலை
கிடைச்சுது. நல்ல வேலை... ஹேப்பியா போகுது பாஸ்” என்றார்.சரி விஷயத்துக்கு வாங்க என நேசமணி விவகாரத்துக்குள் கொண்டு வந்தோம், ``உங்க எல்லோருக்கும் வைரல் ஆன இந்த கமென்ட்தான் தெரியும். ஆனால், உண்மையில் நான் இந்த கமென்ட் போடுறதுக்கு ரெண்டு நாள் முன்னால இதே விஷயத்தை இதே மாதிரி ஒரு போஸ்ட்டுக்கு தமிழ்ல கமென்ட் பண்ணி இருந்தேன். ஆனா அத யாரும் கண்டுக்கல. அதுக்கு கீழ வேறு ஒரு நண்பர் வடிவேல் சார் தலையில சுத்தியல் விழுற அந்தக் காட்சியை `gif’ வீடியோவாக கமென்ட் பண்ணிருந்தார்.
அதுக்கு அப்புறம் நீங்க பாக்குற இந்த வைரல் போஸ்ட்ல என் நண்பன் ஒருத்தர் என் பெயரை டேக் பண்ணியிருந்தான். நான் அப்போ வேலையில இருந்தேன். சைட்ல ரொம்ப வெயிலா இருக்கும். அப்போ டைம் கிடைக்கிறப்போ ஏ.சி ரூம் உள்ள 10 நிமிஷம் வந்து போவோம். அப்போ ஃபேஸ்புக் பாக்குறப்போதான் நண்பன் டேக் செய்த விஷயம் தெரிஞ்சிது. சரி, நம்மகிட்ட இருந்து ஏதோ எதிர்பார்க்குறாங்கனு இந்த வாட்டி இங்கிலீஷ்லேயே கமென்ட் பண்ணிட்டு எப்பவும் போல வேலைக்குப் போயிட்டேன். அதுல நேசமணி பத்தி நலம் விசாரிப்பவரும் என் நண்பர்தான். அவருக்கு நக்கலுக்காக சீரியஸாக கேட்க நானும் அதே டோன்ல ரிப்ளெ பண்ணினேன்.

`தமிழ்நாட்டு அளவுல ஓகே.. அனா இந்திய டிரெண்டிங்ன்னு சொன்னப்போ எனக்கு தலையே சுத்திடிச்சு. அப்புறம் உலக டிரெண்டிங்ல ஏழுன்னு சொன்னங்க... நாலுன்னு சொன்னாங்க... எனக்கு என்னனு சொல்ல தெரியாத பயம் வந்திடிச்சு. நைட் சாப்பிடக்கூட இல்ல.. அப்படியே தூங்கிட்டேன். நான் இந்த ட்விட்டர்ல ஆக்டிவ் கிடையாது. நான் அஜித் ரசிகன். அஜித் படம் வெளியாகும்போது டிரெண்டிங்ல வரும். அத பாக்குறதுக்காகதான் ட்விட்டர் அக்கவுன்ட் வச்சிருந்தேன். ரொம்ப நாளா ஓப்பன் பண்ணாததுனால அது நேத்து ஓப்பன் ஆகல. இன்னைக்கு ஒரு முக்கியமான அசைமென்ட் வேற முடிக்கணும். முடிக்கல, இத வச்சுதான் ஆபீஸ்ல என்ன திட்டுவாங்க...” என்றார்.
சரி பாஸ் கடைசியா நேசமணி விஷயத்துல ஒரு `நச்’ கமென்ட் சொல்லலாம்னா என்ன சொல்லுவீங்கனு கேட்டா #Pray_For_Neasamani” என முடித்துக்கொண்டார் இந்த வி.ஐ.பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக