ஞாயிறு, 10 மார்ச், 2019

தமிழர் வரலாற்று ஓலைசுவடிகளையும் இதர சான்றுகளையும் உலகத்தரத்தில் தேடி பாதுகாக்கும் . Dr.க.சுபாஷினி வீடியோ


ஓலை சுவடிகளை கணினியில் பதிவேற்றம்
செய்வதில் மிகவும் கடினமான பணியை செய்து கொண்டுவருகிறது தமிழர் மரபு அறக்கட்டளை .
கல்வெட்டுக்கள், ஓலைசுவடிகள், அகழ்வு ஆய்வுகள் மூலம் கிடக்கும் தகவல்கள் மட்டுமல்ல , மக்களின் வழி வழியாக வந்த வாய்மொழி இலக்கியங்கள் போன்றவறின் மூலம் கிடைக்கப்பெறும் செய்திகள் ...
அவுஸ்திரேலியா பழங்குடி மக்களின் டி என் ஏ, தென்னமரிக்கா, ஐரோப்பியா , கிழக்காசிய நாடுகள். எகிப்துக்கு சென்றாலும் சரி அங்கெல்லாம் தமிழர்களின் பானை ஓடுகள் போன்ற எராளமான சான்றுகள் கிடைந்திருக்கின்றன . தமிழர்களின் வரலாறு என்பது ஒரு நீண்ட நெடிய வரலாறு .ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி எழுதியுள்ளார்கள் ஆனால் இவற்றை உலகளாவிய ரீதியில் முதல்தரமான சான்றுகளாக கொடுக்க முடியாது .
அதற்கு ஆதாரங்கள் தேவை படுகின்றன . அவற்றை தேடவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் . நிறைய அறிஞர்கள் தன்னார்வ தொண்டர்கள் என்னோடு சேர்ந்து பயணிக்கிறார்கள் ..
தமிழ் எழுத்துக்கள் பல வடிவங்களாக மாறி மாறி வந்திருக்கிறது ..
தமிழி என்ற எழுத்து இரண்டாக பிரிந்தது .. வட்டெழுத்து என்றும் இன்றைய தமிழ் எழுத்தின் மூலகூராகவும் வளர்ந்தது ..
வட்டெழுத்தில் ஒரு மாறுபட்ட வடிவமாக இன்றய மலையாள எழுத்து உள்ளது .


கத்தோலிக்க மதகுருமாரே தமிழில் முதல் அச்செழுத்துக்களை பதிபித்தனர் ..இந்தியா முழுவதும் முதலில் வந்த அச்சு நூல் தமிழ் நூல் .
ஆட்சியாளர்கள்தான் எழுத்து வடிவங்களை தீர்மானித்தனர் .
தமிழில் கணினியில் எழுத்துக்கள் : ஏராளமான fonts களில் கணினி தமிழ் இருந்தது ..
1999 இல் கலைஞர் அரசுதான் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு ஒரு ஆய்வு குழுவை அமைத்து தமிழ் எழுத்துக்களை ஒழுங்கு படுத்தி யுனிகோட் என்று ஒரே விதமான fonts இல் அறிமுகம் செய்தது.
இப்பொழுது உள்ள ஒரு சில பத்திரிகைகளை விட உலகம் முழுதும் ஏனைய மொழிகள் போன்று யுனிகோட்...
இது போன்ற ஏராளமான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை முனைவர் க.சுபாஷினி இந்த பேட்டியில் கூறி உள்ளார்.
நான் இங்கே சிலவற்றை ஒரு கோடிட்டு மட்டுமே காட்டி உள்ளேன் . முழு செய்திகளையும் இந்த கானொளியில் பார்த்து கேட்டு அறியலாம் . முடிந்தால் பகிரவும்

கருத்துகள் இல்லை: