வியாழன், 1 நவம்பர், 2018

அமெரிக்கா : இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது. US Defence Secretary James Mattis Sri Lanka lost sovereignty .. over

US Defence Secretary James Mattis Sri Lanka lost sovereignty over its own harbour as a result of the deal with China. Mattis was referring to the deal between Sri Lanka and China on the Hambantota port. Speaking at the US Institute of Peace (USIP) the US Defence Secretary said that there are concerns among some countries over China using debt on nations they know cannot repay it. “And then you see what happened in Sri Lanka, where they lost sovereignty over their own harbour. One of those issues, I’ll be talking, obviously, with my counterpart about here in Washington, shortly,” he said.  colombogazette.com
இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால்  கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அவர்கள் தங்கள் துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.< virakesari.lk<

கருத்துகள் இல்லை: