வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

தவத்திரு.சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் மறைவு .

Muruganantham Ramasamy : கீழைச்சிதம்பரம் என வழங்கப்படும் கோவை பேரூர்
ஆதீன மடத்தின் மூத்தபட்டம் தவத்திரு.சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தான் நம்பும் சிவனடி நிழல் சேர்ந்திருக்கிறார்..
தமிழ் வழிபாடு, தீந்தமிழ் தெய்வீக முறை திருமணம், ஆகியவற்றிற்கு ஓயாது குரலெலுப்பி தமிழ் மெய்யியல் தரப்பின் பிரதிநிதிகளாக நின்றது அவரும், அவரின் பேரூர் ஆதீன மடமும்.. இன்றும் தமிழ்நெறித்திருமணம் நடத்திவைக்கும் அடியார்குழுவை பயிற்றுவித்து அதை ஒரு இயக்கமாகவே நடத்துபவர் அவரே.. தமிழ்மொழியின் புத்துயிர்ப்பின் மீது அக்கறை கொணடவர்கள் அனைவருக்கும் இது பேரிழப்பு..
அவரின் ஆன்மாவிற்கு அஞ்சலி..!

கருத்துகள் இல்லை: