செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் இறந்ததை மறைத்து சுதந்திர தினம் கொண்டாடி... அப்புறமா அறிவித்தார்களா? வெடிக்கும் சர்ச்சை ..சிவசேனா தலைவர் போர்க்கொடி!

சுதந்திர தினத்தின் போது நாடு துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும்,
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதை தவிர்க்கவும், செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காகவும் வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மரணமடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது ? 
மாலைமலர் : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 12, 13 ஆம் தேதிகளில் மிகவும் மோசமான நிலையில், 16 ஆம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில், அவரது இறந்த தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக சிவ சேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

 இதனால் இந்த விஷ்யம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சஞ்சய் ராவத் எழுப்பிய சந்தேகம் பின்வருமாறு..<br /> முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி இறந்துவிட்டாரா அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பாதிப்பிற்கு உட்படுத்துவதை தவிர்க்க அவரது மரண செய்தி தாமதமாக அறிவிக்கப்பட்டதா என மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நமது மக்களை காட்டிலும் சுயராஜ்யம் தான் முக்கியம் என ஆட்சியாளர்கள் உள்ளனர். சுதந்திர தினத்தின் போது நாடு துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதை தவிர்க்கவும், செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காகவும் வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மரணமடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.<

கருத்துகள் இல்லை: