nakkeeran : 5 மாநிலங்களில் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மக்கள் உரிமை

பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்து இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் ரோனா வில்சன் உள்ளிட்ட 5 பிரபல மனித உரிமைப் போராளிகள் கொடிய உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மோடியை கொல்ல சதி செய்யும் கடிதம் ஒன்றை கைப்பற்றியதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதே காரணத்தை கூறி இப்போது கைது சோதனை என அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி கும்பல்.
கடந்த ஜனவரியில் மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் பார்ப்பனர்களை தாழ்த்தப்பட்ட படை வீரர்கள் வெற்றி கொண்ட 200வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சார்ந்த ரவுடிகள் கலவரம் செய்தனர். இதனை தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும் எழுதி, பேசி வருகின்ற நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்கள் பேராசிரியர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் அறிவுத்துறையினர் கழுத்தை நெரித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கிறது மோடி அரசு.
அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதின் தொடக்கம் தான் இந்த கைது சோதனை. ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மையினர் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோர் நலனைக் காப்பாற்ற முடியாது. எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம் ஓரணியில் திரண்டு முறியடிப்போம்.’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக