சனி, 1 செப்டம்பர், 2018

இந்தியாவில் பெட்ரோல் ரூ.80; வெளிநாடு ஏற்றுமதியோ ரூ.34!

தினமலர்
:புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஜன.,1 முதல் ஜூன் 30ம் தேதி வரை 15 நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசலை 29 நாடுகளுக்கு ரூ.34 முதல் ரூ.36 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவில் பெட்ரோல் ரூ.80க்கும் அதிகமாக விற்கப்படும் நிலையில், வெளிநாடுகளுக்கு ரூ.34க்கு இந்தியா விற்பனை செய்வது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஆர்.டி.ஐ., தகவல்:
 பஞ்சாப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை குறித்த விவரங்களை கேட்டு கடிதம் எழுதினார்.

இதற்கு மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் 3 மாதத்திற்கு பின் பதிலளித்துள்ளது
 அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து, மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.74க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு மிகக்குறைந்த விலைக்கு இந்தியா ஏற்றுமதி செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்., கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: