

இது
தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர்
பதிவில், ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர்
உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை
அறிவித்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில்,
இவ்விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பிரதமர் மோடி
மற்றும் மத்திய அரசை மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக
சாடியுள்ளார்.
'மதிப்பிழப்பு
செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 99.3 சதவீதம் அளவிலான பணம்
வங்கிகள் மூலம் மீண்டும் நடமாட்டத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது. என்னுடைய முதல் கேள்வி, கருப்புப் பணம் எங்கே போனது?
பெரும் பண முதலைகள் தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை எல்லாம் சப்தமில்லாமல் வெள்ளையாக மாற்றிகொள்வதற்குதான் மத்திய அரசு இந்த பண மதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்ததா? என்பது எனது இரண்டாவது கேள்வி’ என தன்னுடைய முகநூல் பக்கத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக