புதன், 13 செப்டம்பர், 2017

சசிகலாவுடன் கர்நாடக மந்திரி திடீர் சந்திப்பு

பெங்களூரு, செப்.13:சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அதிமுக அம்மா அணி யின் பொதுச் செயலாளர் பதவி பறிக் கப்பட்ட நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ராம லிங்க ரெட்டி, தன் ஆய்வின் போது, நேற்று சந்தித்து பேசினார். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அந்தமாநிலத்தின் புதிய உள்துறை அமைச்சராக ராமலிங்க ரெட்டி சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்து முதன் முறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அடைக்கப்பட் டுள்ள அறைக்கு சென்று அவரி டம் நலம் விசாரித்தார். இது குறித்து ராமலிங்க ரெட்டி கூறுகையில், என்னைப் பார்த்ததும் எழுந்து வந்த சசிகலா வணக்கம் தெரிவித்தார். நானும் அவருக்கு பதில் வணக்கம் தெரிவித்தேன். அப்போது நான் நலமாக இருக்கிறீர்களா, சாப்பிட்டீர்களா, நன்றாக தூங்குகிறீர்களா என அவரிடம் தமிழிலேயே நலம் விசாரித்தேன். சசிகலாவும் அதற்கு பதில் கூறி சிரித்தார் இந்த சந்திப்பின்போதுஇளவரசியும் உடன் இருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: