சனி, 16 செப்டம்பர், 2017

சாதாரண சாரணர் தேர்தலிலேயே இத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றிய பாஜக !

ஒரு சாதாரண பதவிக்கு நடக்கும் தேர்தலிலேயே இவர்கள் இத்தனை அயோக்கியத்தனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால், இதை வைத்தே உ.பி, அசாம் போன்ற மாநிலங்களில் நடந்தப் பொதுத் தேர்தல்களின்போது இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம்.
தேர்தலைக்கூட விடுங்கள், சாதாரன தொலைக்காட்சி விவாதங்களிலேயே இந்த பா.ஜ.க ஆட்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாதப்பட்சத்தில் கத்திக் கூச்சல் போட்டு ஆட்டையைக் கலைத்துவிடும் நாராயணன், கல்யாணராமன், சேகர், வானதி, பா.ராகவன் வகையறாக்களின் ஈனத்தனத்தைதான் நாம் எத்தனையோ முறை பார்திருக்கிறோமே.
 சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா படுதோல்வியடைந்தார். உண்மையில் இது ஒரு செய்தியே அல்ல. காரணம், இவர்கள் மண்ணைக் கவ்வப்போவது உறுதி என்றுத் தெரிந்தே வெறும் ஊடக வெளிச்சத்திற்காகவும், ஆளும் அ.தி.மு.கவே தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைவைத்து தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்துவருகிறது என்பதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தவுமே இவர் இதில் போட்டியிட்டிருக்கலாம்.

அந்த வகையில் பார்த்தால், இந்த காவிச் சில்லரைகளை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து தளபதி ஸ்டாலின் தன் முகநூலில் இதைப் பற்றி எழுதியதை நினைத்தே இவர்கள் திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான். தமிழகத்தில் ஒரு நகரமன்றத்தில்கூட ஜெயிக்குமளவு வாக்குவங்கியில்லாத கட்சிக்கு இதுவே அதிகம். ஆகவே இந்தத் தேர்தல் முடிவும், எச்.ராஜாவின் காவி அரைட்ரவுசர் அவிழ்க்கப்பட்டதும் ஒரு செய்தியே அல்ல.
ஆனால் இன்று தேர்தலின்போது இந்தக் காவிக் கயவர்கள் அரங்கேற்றிய கேவலத்தை நாம் அறிந்துக்கொள்வது அவசியம். வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருக்கும்போதே எச்.ராஜா அவரது கூட்டாளிகளோடு அங்கு சென்று, 'சாரண சாரணியர் மத்திய இயக்ககம்' (Central Directorate) இந்த தேர்தலை ரத்து செய்திருக்கிறது என்று சொல்லி ஒரு இ-மெயிலைக் காட்டியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், தேர்தல் நடத்தும் அதிகாரியோ "தனக்கு இப்படி எந்த இ-மெயிலும் வரவில்லை" என்று திட்டவட்டமாக மறுத்ததற்குப் பிறகே தேர்தல் நடந்திருக்கிறது.
ஒரு சாதாரன பதவிக்கு நடக்கும் தேர்தலிலேயே இவர்கள் இத்தனை அயோக்கியத்தனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால், இதை வைத்தே உ.பி, அசாம் போன்ற மாநிலங்களில் நடந்தப் பொதுத் தேர்தல்களின்போது இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம்.
தேர்தலைக்கூட விடுங்கள், சாதாரன தொலைக்காட்சி விவாதங்களிலேயே இந்த பா.ஜ.க ஆட்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாதப்பட்சத்தில் கத்திக் கூச்சல் போட்டு ஆட்டையைக் கலைத்துவிடும் நாராயணன், கல்யாணராமன், சேகர், வானதி, பா.ராகவன் வகையறாக்களின் ஈனத்தனத்தைதான் நாம் எத்தனையோ முறை பார்திருக்கிறோமே.
கருத்துரிமையையும், ஜனநாயகத்தையும் மதிக்காத பாசிஸ்டுகளின் கதி வரலாற்றில் என்ன ஆயிற்று என்பதை காவிகள் உணரப்போகும் நாள் வெகுத்தொலைவில் இல்லை.
ராஜாவோ, ராஜாஜியோ... 'காவி அரைட்ரவுசர்' என்று தெரிந்துவிட்டால் அதைத் தப்பாமல் அவிழ்த்துவிடும் பெரியார் மண்ணில் இருந்து அது தொடங்கட்டும்.
-Ganesh Babu

கருத்துகள் இல்லை: