செவ்வாய், 12 செப்டம்பர், 2017

ஒரே ஒரு மாணவருக்கு வகுப்பு எடுத்த வேலூர் சி எம் .சி மருத்துவ கல்லூரி

ஒரே ஒரு மருத்துவ மாணவருக்காக வகுப்பு எடுத்த சி.எம்.சி கல்லூரி. வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்று வந்த ஒரு மாணவருக்காக வகுப்பை தொடங்கியது. சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நிறுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சி.எம்.சி. சார்பில் தனியாக ஒரு தேர்வு நடத்தும் அதில் வெற்றி பெறுபவர்கள் தங்கள் கல்லூரி மூலம் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. இது பற்றி உச்சநீதிமன்றத்தில் சிஎம்சி சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் வழக்கின் தீர்ப்பு அக்.11ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மாணவருக்காக சி.எம்.சி முதலாமாண்டு வகுப்பை தொடங்கியுள்ளது.லைவ்டே

கருத்துகள் இல்லை: