வியாழன், 14 செப்டம்பர், 2017

மலேசியா பள்ளியில் தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத
போதனை பள்ளியில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இது என்று மலேசிய தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தினத்தந்தி

கருத்துகள் இல்லை: