வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ஜெ. மரணம்... விசாரணை குழு... எல்லாம் மறந்த பன்னீர்செல்வம் !

"ஜெ. மரணம் தொடர்பான மர்மத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும்னு
உத்தரவாதம் கொடுத்து ஓ.பி.எஸ். அணியை தன்னோடு சேர்த்த இ.பி.எஸ்., அ.தி.மு.க. பொதுக்குழுவில் அது தொடர்பா எந்தத் தீர்மானமும் நிறைவேற்றலையே?'' "ஓ.பி.எஸ். முதல்வரா இருந்தப்ப சென்னையை ஒரு காட்டு காட்டிய வர்தா புயல் சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக நன்றி தெரிவித்து தீர்மானம் போட்டு ஓ.பி.எஸ். தரப்பை குளிர்வித்த இ.பி.எஸ்., ஜெ.வின் மரண மர்மம் சம்பந்தமான விசாரணை பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றலை. முதல்வர் பதவி பறிபோனதும் நியாயவான் போல ஜெ. சமாதியில் தியானம் இருந்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸும் துணை முதல்வராகிவிட்ட நிலையில், விசாரணை கமிஷன் சம்பந்தமான தீர்மானத்தை வலியுறுத்தலை. ஜெ. மரண மர்மத்தை அவரோட சமாதியிலேயே போட்டு புதைச்சி, பன்னீர் தெளிச்சிடலாம்னு முடிவெடுத்துட்டாரு போல."  நக்கீரன்

கருத்துகள் இல்லை: