புதன், 13 செப்டம்பர், 2017

எவிடென்ஸ் கதிர் to சீமான் : ஏன் தனியாக யாருக்கும் தெரியாமல் அழுதிங்க?

மை டியர் ப்ரோ சீமான்..உங்கள் உணர்ச்சி மிக்க நேர்காணலை
பார்த்தேன்.தம்பி இளவரசன் மரணம் ஆனபோது அழுதேன் என்று சொன்னிங்க.நீங்கள் அழுது இருக்கலாம்.இளவரசனுக்கு மட்டுமா நீங்கள் அழுது இருப்பிங்க..தம்பி கோகுல் கொல்லப்பட்டபோது தம்பி சங்கர் கொல்லப்பட்டபோது தங்கை நந்தினி பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்யப்பட்டபோது இப்படி நம் தம்பிக்கும் தங்கைக்கும் அழுது இருப்பிங்க.அதுசரி நம் ஈழ சொந்தங்களை கொன்ற ராஜபக்சேவுக்கு எதிராக கடும் கோபம் கொண்ட நீங்கள் நம் தம்பிகளை கொன்ற நம் தம்பிகளின் குடிசைகளை எரித்து சாம்பல் ஆக்கின சாதி சங்க/ சாதி அரசியல் கட்சியை எதிர்த்து அரசியல் போர் புரியாமல்,ஏன் தனியாக யாருக்கும் தெரியாமல் அழுதிங்க?

கருத்துகள் இல்லை: