வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ஏன் அவரை பேரறிஞர் என அழைக்கிறார்கள்? அண்ணாவின் 108 வது பிறந்த நாள்! 15 - 09- 1909

சாய் லட்சுமிகாந்த் : ஏன் அவரை பேரறிஞர் என அழைக்கிறார்கள்?? அப்படி
அண்ணாவை நான் பேரறிஞர் என்று சொல்ல காரணம் அவர் ஆற்றிய அறிவார்ந்த உரைகளையோ, தீட்டிய புத்தகங்களையோ, யேல் பல்கலைக்கழகம் கூப்பிட்டு சிறப்பித்ததனாலோ ( இங்கே இப்போது உள்ள சில டுபாக்கூர் டிகிரி ஹோல்டர்கள் போல்லல்லாமல்) அல்ல... அவர் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதனால் தான் அவரை பேரறிஞர் என்கிறேன்.. விளங்கவில்லையா?? சொல்கிறேன் (இது என்னுடைய கருத்து அல்ல ஒரு கண்டத்தின் மாபெரும் தலைவர் தன் மருத்துவரிடம் பகிர்ந்துக்கொண்ட செய்தி) ஒரு அறிஞன் என்பவன் தற்காலத்துக்கு மட்டும் யோசிக்காமல் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுபவன் ஆவான்.. உலக அறிஞர்கள் ஒவ்வோருவரும் அப்படியே... அண்ணா மட்டும் அன்று திராவிட நாடு கோரிக்கையை கைவிடாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று யோசியுங்கள்.. ஹைதராபாத் இந்தியாவுடன் எப்படி இணைக்கப்பட்டது, காஷ்மீர் இன்றளவும் இந்தியாவுடன் எப்படி ஒட்டிவைக்கப்பட்டுள்ளது என்று சிந்தித்தீர்களேயானால் அண்ணாவின் தீர்க்கதரிசனம் பேராற்றல் புரியும்...
" If Anna would have continued to hold on to a separatist ideology he would have won eventually but he would have been a leader of a graveyard instead of a nation".. ஒரு தலைவன் தன்னை நம்பி வந்த தொண்டனை நிம்மதியாக வாழவைக்க வேண்டும், அண்ணாவின் வார்த்தைக்காக உயிரை கொடுக்க லட்சோப லட்ச தொண்டர்கள் தயாராக இருந்தாலும் அண்ணா அவர்களை வாழவைக்கவே நினைத்தார். அவர் ஒவ்வொரு தொண்டரின், தன் இன மக்கள் ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிக்க முடியாதது என்று நம்பினார் அதனால் தான் அவர் திராவிட நாடு கோரிக்கையை தள்ளிப்போட்டார், ஆம் விட்டுவிடவில்லை தள்ளிப்போட்டார், அப்படி செய்யும் போது திராவிட நாடு கோரிக்கை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது என்று ஒரு பொடியும் வைத்தார்... அதை இக்கால சூழலுக்கும் பொருத்தமான அரசியல் முடிவாகவே நான் பார்க்கிறேன்... "கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு" என்ற வாசகமே அண்ணாவை நீங்கா புகழ் பெற்ற பேரறிஞராக நம் முன் நிறுவியிருக்கிறது என்பது மறுக்க முடியாது உண்மை. 
. (மேலே மேற்கொள் காட்டிய வரிகள் ஆப்பிரக்க கண்டத்தின் தலைவராக விளங்கிய நெல்சன் மண்டேலா தன் மருத்துவரான ஒரு தமிழரிடம் பகிர்ந்தது
என்ன அவர் சாதித்துவிட்டார்?? திராவிட நாடு கோரிக்கை அவரால் கைவிடபட்டதே பின் எப்படி அவரை பேரறிஞர் என ஏற்றுக்கொள்வது??

கருத்துகள் இல்லை: