வியாழன், 30 ஏப்ரல், 2015

திருச்சி சுங்க அலுவலகத்தில் மேலும் பல கிலோ தங்கம் களவு போய்விட்டதாம்! கஸ்டம்ஸ் கஷ்டம்ஸ் ?

திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் காணாமல் போயிருப்பது சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 15 கிலோ தங்கம் காணாமல் போனது குறித்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தின் கண்காணிப்பாளர் முகமது சாருக், ஆய்வாளர் செந்தில் குமார் ஆகிய இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுகிறது. அதாவது முதலில் 15 கிலோ காணாமல் போனது என்றனர். தற்போது மீண்டும் 15 கிலோ காணாமல் போனது என்றனர். விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கங்கள் இந்த அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கம் காணாமல் போனதாக குற்றச்சாட்டு தற்போது வந்துள்ளது. அதாவது இங்கு வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகள் வேலை செய்யும் ஊழியர்களால் பெருமளவில் களவு போயிருக்கலாம். அதனை வெளியே சொன்னால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக படிப்படியாக காணாமல் போனதாக அறிவிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஜெ.டி.ஆர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: