சனி, 2 மே, 2015

பஞ்சாப் முதலமைச்சரின் பஸ்ஸில் பாலியல் பலி! பணம் வேண்டாம் நீதிதான் வேண்டும் பெண்ணின் தந்தை ஆவேசம்


பஞ்சாம் மாநிலம் மோகா என்ற பகுதியில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்த சிறுமி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாயும் படுகாயம் அடைந்தார். சம்பவம் நடந்த பேருந்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங்கின் மகனுக்குச் சொந்தமானது ஆகும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், சிறுமியின் உடலை வாங்கவும், மாநில அரசு சார்பில் அளிக்க முன் வந்த 20 லட்சம் நிதியுதவி, அரசு வேலையையும் ஏற்க மறுத்துவிட்ட சிறுமியின் தந்தை, எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், நீதிதான் வேண்டும். பேருந்து உரிமத்தை ரத்து செய்து, அதன் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.dinamani.com

கருத்துகள் இல்லை: