செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஆந்திரா 20 Tamils விசாரணையை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அடியோடு நிராகரித்தது !

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முதற்கட்ட விசாரணை நடத்திய ஆந்திர காவல்துறையின் விசாரணைக் குறிப்பு ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது.
ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை விசாரணைக் குறிப்பை ஆய்வு செய்த நீதிபதி, விசாரணை குறித்த விவரமே இல்லாத குறிப்பை தாக்கல் செய்தது ஏன் என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது.
மேலும், ஒட்டு மொத்த விசாரணைக் குறிப்பையும் நிராகரிப்பதாக உத்தரவில் கூறியுள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை: