புதன், 9 ஜூலை, 2014

ரயில்வே பட்ஜெட்டை ஜெயலலிதா பாராட்ட சொத்துக் குவிப்பு வழக்கே காரணம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். மத்திய ரயில்வே பட்ஜெட்டை நேற்று ரயில்வே அமைச்சர் சதானந்தா கெளடா தாக்கல் செய்தார். அதில் தமிழகத்திற்கு பெரிய அளவில் எதுவுமே இல்லை. இந்த பட்ஜெட் குறித்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; ‘‘கடந்த கால அரசின் முடிவு அது'' என்று கூறி அறிவித்துவிட்டு, பட்ஜெட்டில் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் என்றும், அது தவிர ஹைதராபாத்துக்கும், பெங்களூருக்கும் சென்னையில் இருந்து அதிவேக ரயில்கள் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு படிக்கப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது.
துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியிருப்பதும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க விரும்புவதாக கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கது அல்ல.
ரயில்வே பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதும், அதில் 4 ஆயிரம் பேர் பெண் போலீஸ் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதும் வரவேற்கக் கூடியதாகும்.
ஜெ. பாராட்டுவது ஏன்... முதல்வர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: